வருந்துகின்றேன் சில காலமாக பிளாக் பக்கம் வராததற்கு ... நான் பின்தொடர்பவர்களின் தளங்களை பார்வையிட்ட போதும் கமெண்ட் எழுதாதற்கு மன்னிக்கவும் . குழந்தைகளுக்கு விடுமுறை அதனால நானும் கொஞ்சம் ஊர் எல்லாம் சுத்துவிட்டு போன வாரம் வீடு வந்து சேர்ந்தாச்சு அப்புறம் பிள்ளைகள் நோட்க்கு அட்டை போடுறதுன்னு ஒரு ரெண்டு நாள் பொழுது போயிட்டு . மிக முக்கியமான காரணம் 3 மணி நேரம் கரண்ட் இல்லை . இனிமேல் ரெகுலர வருவேன் .
நான் ஒரு தளத்தில் படித்த கடி ஜோக்குகள் சில உங்களுக்காக இதை படிச்சுகிட்டு இருங்க நான் சில கோலங்களுடன் வருகிறேன்.
) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு
இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே
மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு
முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்
கெளம்பனும்...
10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
11) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
12) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
14) நான் எழுதின கதை எப்படி இருக்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது
15) கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?"
"கோழியினால்தான் முட்டை வந்தது"
"எப்படி?"
"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே
முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன்.
ஆனால் அதோடு கோழி வரவில்லை
16) பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.
அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
அம்மா: கெட்ட செய்தி
பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
17) நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
18) மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:..???.............
19) ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்
20) நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
21) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
நன்றி ikolam.com
Saturday, June 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வாங்க கோலங்களை அழகாக போடும் கோகுல ராணியே இப்ப கடி ஜோக்ஸையும் பகிர்ந்து கொள்கிரீஙக்.
ReplyDelete6) மூன்று மொக்கைகள்:
a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே
மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா?
ஹிஹிஹிஹி
வாங்க வாங்க... விடுமுறை எல்லாம் பிள்ளைகளுடன் நன்றாக போனதா?
ReplyDeleteகடி ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு, கடைசி ஒண்ணுதான் கரெக்ட்:)
வாங்க !! வந்ததுமே கடியா !!! நல்லா இருங்க . அப்படியே ஊர் சுத்தினதை அழகா ஒரு பதிவா போடுங்க !!!
ReplyDeleteயக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வந்தாச்சா என்பிள்ளைகள் சுகமா. நல்லா ஊர் சுத்தியாச்சா. எங்கெல்லாம் போனீங்க அண்ணாத்தே எப்புடிகிறார்.
ReplyDeleteகடியோ கடி கடிக்கிறீங்க
உங்ககூட டுக்கா.. என்கிட்ட சொல்லாமபோனிங்கல்ல.
தஞ்சைபக்கம் போனீங்களாக்கா..
நன்றி ஜலீலா அக்கா , எல்லாம் நீங்க கொடுத்த டிப்ஸ் தான். அதான் நான் படிச்சதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். கூடிய விரைவில் சமையல் எல்லாம் போட முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteவாங்க பிரியா , விடுமுறை எல்லாம் நன்றாக போனது.
ReplyDeleteவாங்க ஜெய்லானி அண்ணா , உங்கள் கடிய விடவா கூடிய விரைவில் எழுதுகிறேன்.
ReplyDeleteமலிக்கா எப்படி இருக்கீங்க , பசங்க நல்லா இருக்காங்க. தஞ்சாவூர் போயிட்டு வந்தேன் , நீங்க சொன்ன தெரு வழியா போறதுக்கான வாய்ப்பும் வந்தது. தஞ்சாவூர், சென்னை , திருப்பதி அப்படின்னு ஒரு சின்ன டூர் அவ்வளவு தான்.
ReplyDeleteஉங்கள் அண்ணாத்தே ரொம்ப நல்லா இருக்காங்க ரொம்பவே பிஸியா இருக்காங்க
சாருக்கா நலமா?? பிள்ளைகளுடன் விடுமுறை நன்றாக சென்றதில் மகிழ்ச்சி...ரொம்பநாளுக்கப்புறம் பேசுறோம்...கடிஜோக் சூப்பர்ர்ர்...அந்த கடைசி ரொம்ப சூப்பர்ர்ர்ர்
ReplyDeleteNice jokes!!
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி...மீண்டும் ப்ளாக் பக்கம் வந்ததற்கு...சீக்கிரம் உங்களுடைய குறிப்புகளை காண ஆவலாக இருக்கின்றது...குழந்தைகள் நலமா....
ReplyDeleteஎங்கயோ படிச்சதுனு சொல்றேங்க, எனக்கு எல்லாமே புதுசா இருக்கு.
ReplyDelete21-ல், எனக்கு பிடித்தது;
//17) நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொடரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'
குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?//
நன்றி.
?
ReplyDelete4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........////
உஸ்.... அப்பா எல்லா ஆறும் ஒரே மாதிரி இருக்காது , ஏன் ?????
சாரு,எப்படி இருக்கீங்க? இந்தப் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்னே தெரில..கொஞ்ச நாளா உங்களை காணோமேன்னு நினைச்சிட்டே இருந்தேன்..பசங்க ஸ்கூல் லீவ் முடிஞ்சதும் வருவீங்கன்னு நினைத்தேன்,அதே மாதிரி வந்துட்டிங்க!:)
ReplyDeleteகடி ஜோக் எல்லாம் சூப்பர்!
எல்லோரும் நல்லா இருக்கோம் மேனகா, ரொம்ப நன்றி
ReplyDeleteரொம்ப நன்றி பத்மா
ReplyDeleteரொம்ப நன்றி கீதா சிக்கிரமா போடுகிறேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஜெய்.
ReplyDeleteவாங்க அமைச்சரே எனக்கு பதில் தெரியாது , நீங்களே விளக்காமாக உங்கள் டீவி யில் ஒரு நிகழ்சியாக ஒளிபரப்புங்கள் (அப்பாடி ஒரு ஐடியா கொடுத்தாச்சு ஒரு நிகழ்ச்சி தயாரிக்க)
ReplyDeleteமஹி நல்லா இருக்கேன். ஆமாம் பசங்களுக்கு சிஸ்டத்தில உக்கார்ந்த கோவம் வருது , அவர்கள் விளையாடும் சமையம் பவர் கட்.
ReplyDelete